"Thiruppavai" Paasuram and connected Divya desam for all 30 Paasurams.


#திருப்பாவையில் 
#திவ்விய_தேசங்கள்

பூமி தேவியின் அவதாரமாக பிறந்தவள் ஸ்ரீ ஆண்டாள்.
பெரிய்யாழ்வார் கருட அம்சமாகவும், ஆண்டாளின் வளர்ப்பு
தந்தையாகவும் இருந்தார்.

நூற்றியெட்டு திவ்விய தேசங்களை பண்ணியிரண்டு ஆழ்வார்கள்
.மங்களசானம் செய்துள்ளனர் . ஆண்டாளின், திருப்பாவையும்,
வேதத்திற்கு சமமாக கருதப்படுகிறது !

ஆண்டாளின் முப்பது பாடல்களிலும் 108 திவ்விய தேசங்கள்
மேற்கோடிட்டு காட்டியுள்ளார் என்பதை திருப்பாவை பாடல்களால்
மறைமுகமாகவோ,யூகமாகவோ நேரிடையாகவோ உரைப்பதைக்
காணலாம் !

முதல் பாசுரம் : மார்கழித் திங்கள், மதிநிறைந்த நன்னாளால்
பரமபத நாராயணனைக் குறிப்பிடுவதாகும்.

இரண்டாம் பாசுரம் : வையத்துவாழ்விற்காள் ,பையத்துயன்ற
பரமனடி க்ஷிராப்திநாதனை குறிப்பிடுவதாகும் !

மூன்றாம் பாசுரம் : ஓங்கியுலகலந்த உத்தமன் பேர்பாடி என்பது
திருக்கோவிலூர் த்ரிவிக்ர பெருமாளை
குறிப்பிடுவதாகும்.

நான்காம் பாசுரம் : ஆழிமழை கண்ணா, என்பது திருமோகுர்
காளமேகப் பெருமாளை குறிப்பிடுவதாகும்!

ஐந்தாம் பாசுரம்: மாயனை என்னும் பாடல் வடமதுரை மைந்தனை
குறிப்பிடுவதாகும்!

ஆறாம் பாசுரம்: புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் என்பது
திருவரங்கத்தில் வீற்றியிருக்கும் அரங்கநாதனையே
குறிப்பிடுவதாகும்.

ஏழாம் பாசுரம்: கீசு,கீசு,சென்றெங்கும்,தொண்டைமானுக்கு,பெருமாள்
உபதேசித்த பேச்சரவமே திருமலை திருப்பதியாகும் !

எட்டாம் பாசுரம்: கீழ்வானம் என்பது காஞ்சியில் உள்ள
தேவாதிராஜனை குறிப்பதாகும் 1

ஒன்பதாம் பாசுரம்: தூமணிமாடத்து சுற்றும் விளக்கெறிய என்பது
திருகுடந்தையையும், அதனை சுற்றியுள்ள தஞ்சை
மணிக்கோவில், கூடலூர்,கபிஸ்தலம்,புள்ளம் பூதங்குடி, ஆதனுர், திருவெள்ளியங்குடி,
திருவிண்ணகர், திருநறையூர், திருச்சேறை,நாதன்
கோவில், என்று அர்ச்சையிலே தசாவதாரமாக
திவ்விய தேசங்கள் சுற்றி விளக்கு எரிகின்றது
என்று குறிப்பிடுவதாகும்.

பத்தாம் பாசுரம்: நோற்றுச்சுவர்க்கம் என்பது, திரு இந்தள்ளுர் ,
திருமங்கை மன்னனுக்கு அனுகிரகித்து,இன்ன
வண்ணம் மென்று காட்டி, அருங்காலமே தேற்றமாய்
வந்து திற, என்பதற்கு பொருத்தமாகும் !

பதின்னொன்ராம் பாசுரம் : கற்றுககறவை என்பது திருவாலி, நாங்கூர்
திவ்விய தேசங்களை குறிப்பதாகும்.

பன்னிரெண்டாம் பாசுரம்: கனைத்திளம் கற்று - ஆழ்வார் திருநகரி .

பதிமூன்றாம் பாசுரம்: புள்ளின்வாய் கிண்டானை - திருவெள்ளியன்குடி

பதினான்காம் பாசுரம்: உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள் என்பது
திருவெள்ளறை

பதினைந்தாம் பாசுரம்: எல்லே இளங்கிளியே என்பது
திருவாய்ப்பாடியைக் குறிப்பதாகும் .

பதினாறாம் பாசுரம்: நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய என்பது
துவாரகாவை குறிப்பிடுவதாகும்

பதினேழாம் பாசுரம்: அம்பரமே தண்ணீரே என்பது திருத்தண்கா -காஞ்சி
- தீப ப்ரகாஸர், வேதாந்த தேசிகனை நமக்கு
அனுகிரகித்தவர் .

பதினெட்டாம் பாசுரம்: உந்து மதகளிற்றன் என்பது திருவயிந்திபுரத்தை
குறிப்பதாகும் .

பத்தொன்பதாம் பாசுரம்: குத்துவிளக்கெறிய என்பது திருநறையூரை
குறிப்பிடுவதாகும்.

இருபதாம் பாசுரம்: முப்பது மூவர், என்பது திருநீர்மலையை
குறிப்பிடுவதாகும் .

இருப்பதொன்று பாசுரம்: ஏற்றகலங்கள் என்பது திருநாராயணபுரத்தை
குறிப்பிடுவதாகும் .

இருபத்திரெண்டாம் பாசுரம்: அங்கண்மா ஞானத்தரசர் என்பது
திருவந்தபுரம் அனந்த பத்மநாபனை
குறிப்பதாகும்.

இருபத்திமூன்றாம் பாசுரம்: மாரிமலை முழைஞ்சில் என்பது
அஹோபில சிங்கபெருமாள்

இருப்பதினான்காம்பாசுரம்: அன்றிவ்வுலகமளந்தாய் போற்றி என்பது
உலகளந்த பெருமாள் - காஞ்சி

இருபத்தைந்தாம் பாசுரம் : ஒருத்திமகனாய் பிறந்து, என்பது
திருச்சித்ரகூடத்தை குறிப்பதாகும்

இருபதியாராம் பாசுரம் : மாலே மணிவண்ணா என்பது
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள்.

இருபத்தேழுவது பாசுரம்: கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா என்பது
திருமாலிரும்சோலையை குறிப்பதாகும்

இருபத்தெட்டாம் பாசுரம் : கறவைகள் பின்சென்று என்பது
நைமிசாரண்யத்தை குறிப்பதாகும்

இருபத்தொன்பதாவது பாசுரம்: சிற்றம் சிறுகாலே என்பது
தேரழுந்தூர் ஆமருவியப்பன் .

முப்பதாம் பாசுரம்: வங்கக்கடல் கடைந்த மாதவனை என்பது
ஸ்ரீவில்லிபுத்தூரை நாச்சியாரே
குறிப்பிட்டுளார்

ஆண்டாள் திருவடிகளே சரணம்

Comments

Popular posts from this blog

Meaning of Sloka: சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் ....

Aathichudi single line verses by Tamil Poet Avvaiyar and their translation

அர்த்த சாஸ்திரம் சொல்லும் நல்விஷயங்கள்